இடுகைகள்

நீலகண்ட பறவை தேடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புத்தக பரிந்துரை - நீலகண்ட பறவை தேடி

நீலகண்ட பறவை தேடி வங்காள மொழியில் எழுதபட்ட நூல். அதின் பந்தோபாத்யாய் அவர்களால் இயற்றப்பட்டு, சு. கிருஷ்ணமூர்த்தியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட  நூல். நூறு ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதை கலம். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் நடக்கும் கற்பனை கதை. சோனாலி பாலி ஆற்றின் கறை ஓரம் இருக்கும் கிராமங்களில் நடக்கும் கற்பனை சம்பவங்கள். கற்பனையை உண்மையாக்குவதுபோல் விவரிக்கும் எழுத்தோட்டம். அந்த கிராமங்களில் அக்காலத்தில் இருக்கும் வாழ்க்கை முறை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது போல் இருந்தது இப்புத்தகத்தை  படித்து முடித்த பின். நான் வெகு வேகமாக தொடர்ந்து படித்த புத்தகம் இதுவாகதான் இருக்கும். பரிட்சைக்கு முந்தய நாள் படிப்பது போல் படித்தேன்.  புத்தகத்தின் முதற் பகுதியில் பல மரங்களின் பெயர்களை குறிப்பிடுகிறார் ஆசிரியர். பல பழங்களின் பெயரை நான் கேள்வி பட்டதில்லை. மரங்கலின் பெயர்களை நான் குறிப்பு எடுத்துக்கொண்டேன். மேலும் பல அறிய வேண்டியவை இந்த புத்தகத்தில் உள்ளது.  அருமையான மொழிபெயர்ப்பு நாவல். அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.